மறைந்தோர் உடலைக் காட்சிக்கு வைத்தல்
இறப்பு ஏற்பட்டால், ஒரு மருத்துவரால் இறப்புச் சான்றிதழைப் பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பிறகு, இறப்பைப் பற்றி பொறுப்பான பதிவு அலுவலகத்திற்கு (Zivilstandsamt) உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.
ஒருவர் மருத்துவமனையில், முதியோர் இல்லத்தில் அல்லது பராமரிப்பு இல்லத்தில் இறக்கிறார்:
- மருத்துவமனை அல்லது இல்லத்தின் நிர்வாகம் இறப்பு குறித்து பதிவு அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
நபர் வேறொரு இடத்தில் இறந்துவிடுகிறார்:
- ஒரு குடும்ப உறுப்பினராக, நீங்கள் மாநிலத்தின் பதிவு அலுவலகத்திற்கு மரணத்தைப் புகாரளிக்க வேண்டும்.
விரும்பினால், கல்லறைக்கு எடுத்துச் செல்வதற்கு அல்லது வெளி நாட்டிற்கு ஒரு இறந்த உடலை எடுத்துச் செல்வதற்கு இறுதிச்சடங்கு சேவையை (Bestattungsdienst) அழைக்கலாம். குடும்ப உறுப்பினராக நீங்கள் இதற்கான செலவைச் செலுத்த வேண்டும். இறந்தோர் இடத்திற்குப் பொறுப்பான பதிவு அலுவலகம் செயல்முறை மற்றும் தேவையான ஆவணங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.